செய்திகள் :

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

post image

இந்தியா மீது அடுத்த 24 மணிநேரத்திற்குள் கணிசமாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல என்றும், இந்தியாவுடன் மிகச்சிறிய அளவே வணிகத்தை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியா மீதான வரி குறித்து டிரம்ப் பேசியதாவது,

இந்தியா பற்றி மக்கள் கூற விரும்பாதது, அவர்கள் அதிக வரி விதிக்கும் நாடு. மற்றவர்களை விட இந்தியா அதிக வரிகளைக் கொண்டுள்ளது. அதிக வரி விதிப்பதால், இந்தியாவுடன் நாங்கள் மிக மிகச் சிறிய அளவிலேயே வணிகத்தை வைத்துள்ளோம்.

இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல; ஏனெனில், அவர்கள் எங்களுடன் அதிக வணிகம் செய்கின்றனர். ஆனால், அந்த அளவு இந்தியாவுடன் நாங்கள் வணிகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதனால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்க முடிவு செய்துள்ளோம். ஆனால், அடுத்த 24 மணிநேரத்தில் மிக கணிசமான வரியை உயர்த்தலாம் என நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

இந்தியா மீது 25% வரி

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என நேற்று (ஆக. 4) அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷியாவில் இருந்து அதிக அளவு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணம் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாகவும், இதைப்பற்றி இந்தியா கவலைகொள்ளவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையும் படிக்க | அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

Trump says he will raise tariffs on India 'very substantially' over next 24 hours

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

மனிதத் திறமைக்கான எல்லையை செய்யறிவு மிக வேகமாக மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடிய இளைஞர்களுக்கு இன்னமும் உலகில் தேவை இருக்கிறது என்பதையே, மத் டெய்ட்கேவின் செய்தி க... மேலும் பார்க்க

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவும் இறக்குமதி செய்வதாக இந்தியா எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யு... மேலும் பார்க்க

யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்

யேமன் அருகே அகதிகள் படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 போ் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. ம... மேலும் பார்க்க

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்... மேலும் பார்க்க

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்ப... மேலும் பார்க்க

‘காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்’

காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் கூறியதாவது: காஸா பகுதியை ... மேலும் பார்க்க