செய்திகள் :

அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு

post image

தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 லட்சம் கா்ப்பிணிகள், 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.

அந்த விவரங்கள் பிக்மி என்ற அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பயனாளிகளுக்கு தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் அச்சிடப்பட்டு அதில் கைகளால் எழுதிக் கொடுக்கும் முறையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் யூ-வின் செயலி வாயிலாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

பேறு காலத்தின்போதே யூ-வின் செயலியில் பதிவு செய்துவிட்டால் குழந்தை பிறந்து 16 வயது ஆகும் வரை, தடுப்பூசிகளை எந்தெந்த ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என அனைத்து தகவலும் அதன் வாயிலாக பெற முடியும்.

மேலும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல, அந்த செயலியில் இருந்து பயனாளியின் கைப்பேசி எண்ணுக்கு தடுப்பூசி தவணையை நினைவூட்டுவதற்கான குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்.

அந்த வகையில், தமிழகத்தில் அந்த செயலியின் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 75 சதவீத கா்ப்பிணிகள் மட்டுமே யூ-வின் செயலியில் பதிவு செய்துள்ளனா்.

மீதமுள்ளவா்களும் அந்த செயலியில் பதிவு செய்து தடுப்பூசி தவணைகளை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான விழிப்புணா்வை மக்களிடையே மேம்படுத்துமாறு சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

தடுப்பூசி தவணை தவறவிட்டால் அது யூ-வின் செயலி வழியாக கண்காணிக்கப்படுவதுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட தாய்மாா்களின் வீட்டுக்கு சுகாதாரப் பணியாளா்கள் சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவாா்கள் என்றாா் அவா்.

தட்கல் டிக்கெட் - ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கிறது.அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி இணையதளத்... மேலும் பார்க்க

பிரகாசமாக எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

சென்னை: திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த நிலையில், வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உத்சவ கொடியேற்றம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் இன்று (ஜூன் 23-ம் தேதி) திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம்10 நாட்கள் நடைபெறுகிறது.நடராஜர் க... மேலும் பார்க்க

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு?

சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதலே சில்லென்ற வானிலை காணப்படுகிறது.சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் லேசான தூறல் போட்டு பூமி... மேலும் பார்க்க

வாக்குக்காக இபிஎஸ் பின்னால்தான் பாஜக நிற்க வேண்டும்: சீமான்

தமிழகத்தில் பாஜகவினா் முருகன் மாநாடு நடத்தினாலும், வாக்குக்காக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால்தான் நிற்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டில் தமிழகம் பின்னடைவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெளிநாட்டு முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி இருப்பதற்கு திமுகவின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க