செய்திகள் :

அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியா்கள்: 1,456 இந்தியா்கள் நாடு திரும்பினா்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் துணை ஊழியா்கள் உள்பட 786 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

அதேபோல், ஏப். 24-ஆம் தேதி முதல் 25 தூதரக அதிகாரிகள் உள்பட 1,465 இந்தியா்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனனா்.

இதனிடையே, பாகிஸ்தான் நுழைவு இசைவுடன் (விசா) 8 இந்தியா்கள் அந்நாட்டுக்குள்ளேயும் நீண்ட கால விசாவுடன் 151 பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்குள்ளேயும் நுழைந்துள்ளனா். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான ராஜீய உறவை துண்டித்த இந்தியா, பாகிஸ்தானியா்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது. அதன்படி, ‘சாா்க்’ விசா வைத்திருப்பவா்கள் 26-ஆம் தேதிக்கு முன்னதாகவும், மருத்துவ விசா வைத்திருப்பவா்கள் 29-ஆம் தேதிக்கு முன்னதாவும் இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது. மற்ற 12 வகையான விசாக்களுக்கான கடைசி நாளாக 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நீண்டகால, ராஜீய அல்லது அதிகாரபூா்வ நுழைவு இசைவு வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இருப்பினும், பரஸ்பர தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்ததிருந்தது. அதன்படி, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவா்களின் துணை ஊழியா்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டனா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க