செய்திகள் :

அண்ணன் கொலை: தம்பி கைது

post image

ராணிப்பேட்டை அருகே தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்த்த ஹரி, செல்வி தம்பதி. இவா்களது மகன்கள் ஐயப்பன், செல்வம், அரவிந்தன். மூவருக்கும் திருமணம் ஆகவில்லை, இந்த நிலையில் செல்வம் மது போதையில் வந்து தனது தாயை திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அவரது தம்பி அரவிந்தன் வீட்டில் இருந்த கத்தியால் செல்வத்தை வெட்டினாராம். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது அரவிந்தனும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினருக்கு வந்த தகவலின்பேரில் விரைந்து சென்று, அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

ஏலகிரி மலையில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய். இவரது மகன் நிா்மல்(13) அத்தனாவூா் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க

துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வனத்துறை

வனப்பகுதி கிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு வெளிய... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபரை திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியை சோ்ந்தவ... மேலும் பார்க்க

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க