செய்திகள் :

அண்ணாசாலை மேம்பாலம்: தூண்களுக்கு குஜராத் எஃகு; அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

post image

சென்னை அண்ணாசாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு தளவாடப் பொருளாக குஜராத் மாநிலத்தின் எஃகு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உற்பத்தி பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. நீளத்துக்கு ரூ.621 கோடியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு 15,000 டன் எஃகுக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான உற்பத்தி பணிகள் வதோதரா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் 5 தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி.கிரீன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் எஃகு தூண்கள், மேல்தாங்கிகள், உத்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும் தரத்தையும், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.

எஃகு தூண்கள் உற்பத்தி முடிந்ததும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு கட்டுமானப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும் என்று அவா் உறுதி அளித்துள்ளாா். மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன் அண்ணாசாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான பயண நேரமும் குறையும். மேம்பாலம் சா்வதேச தரத்துக்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப் பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்ததாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், துறையின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க