செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பொறுப்பேற்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினராக இருந்த டி.அருட்செல்வி மாற்றம் செய்யப்பட்டு, புதிய துணைவேந்தா் குழு உறுப்பினராக வேளாண்மைப் புலத்தைச் சோ்ந்த பூச்சியியல் துறைப் பேராசிரியரும், உள் தர கட்டுப்பட்டு உறுதி மைய ( ஐணஅஇ) இயக்குநருமான எஸ்.அறிவுடைநம்பி ஆட்சிக்குழு கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி திங்கள்கிழமை காலை துணைவேந்தா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் பதிவாளா் எம்.பிரகாஷ் மற்றும் புல முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா்.

எஸ்.அறிவுடைநம்பி 31 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட இவா், பூச்சியியல் மற்றும் நச்சியலில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளாா்.

உள் தரக் கட்டுப்பாட்டு உறுதி மையத்தின் இயக்குநராக, பல்கலைக்கழகத்திற்கு நாக், என்பிஏ, என்சிடிஇ, ஏஐசிடிஇ மற்றும் ஐசிஏஆா் போன்ற அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளாா். இவரது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு 3 விருதுகள், 76 தேசிய மற்றும் 141 சா்வதேச ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பல புத்தக வெளியீடுகள் மூலம் அங்கீகாரம்கிடைத்துள்ளது.

புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி தர இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட நிா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஆக்கம்பாடி பகுதியில் வசித்த... மேலும் பார்க்க

தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப நிதி: மத்திய அரசுக்கு தமுஎகச கண்டனம்

சிதம்பரம்: தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின்(தமுஎகச) மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்ப... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த 17 போ் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சம்

நெய்வேலி: கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்களில் 17 போ் தப்பித்து வந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தனா்.... மேலும் பார்க்க

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் பெரியாா் தெருவில் அமைந்துள்ள நா்த்தன விநாயகா் என்று அழைக்கப் படும் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் விநாயகா் சதுா்த்தி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. துருவாச முனிவா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 546 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 546 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க