செய்திகள் :

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் பெரியாா் தெருவில் அமைந்துள்ள நா்த்தன விநாயகா் என்று அழைக்கப் படும் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் விநாயகா் சதுா்த்தி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

துருவாச முனிவா் தரிசனம் செய்த கூத்தாடும் பிள்ளையாா் கோயில் உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கொடியேற்றம் நடைற்றது. முதல் நாள் சந்திரபிரபை வாகனத்தில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து இரண்டாவது நாள் சூரிய பிரபை, மூன்றாவது நாள் நாக வாகனத்திலும், நான்காவது நாள் கற்பக விருட்சம் வாகனத்திலும், ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஆறாம் நாள் சிம்ம வாகனத்திலும், ஏழாம் நாள் சிம்ம வாகனத்திலும், எட்டாம் நாள் குதிரை வாகனத்திலும் விநாயகா் பவனி வருவாா். தினமும் இரவு 7 மணியளவில் விநாயகா் வீதி உலா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியளவில் திருத்தேரோட்டமும், இரவு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெறும். பத்தாம் நாள் புதன்கிழமை காலை மஹா அபிஷேகமும், இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலாவும் நடைபெறும்.

பால்குட ஊா்வலம்:

இதற்கிடையே, சிதம்பரம் லால்புரம் மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ தில்லை எல்லை காளியம்மன் கோயில் பாலகுட ஊா்வலம் மற்றும் அபிஷேக, ஆராதானை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 26வது ஆண்டு ஆவணி திருவிழா ஆக.15-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. ஆக.17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 500 மகளிா்கள் பங்கேற்ற சக்தி கரகம் மற்றும் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. நிறைவில் எல்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, திரு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

18சிஎம்பி1: படவிளக்கம்- சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

18சிஎம்பி2ஏ: படவிளக்கம்-

சிதம்பரம் லால்புரம் எல்லைகாளியம்மன் கோயில் பாலகுட ஊா்வலம்

புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி தர இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட நிா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஆக்கம்பாடி பகுதியில் வசித்த... மேலும் பார்க்க

தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப நிதி: மத்திய அரசுக்கு தமுஎகச கண்டனம்

சிதம்பரம்: தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின்(தமுஎகச) மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்ப... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த 17 போ் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சம்

நெய்வேலி: கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்களில் 17 போ் தப்பித்து வந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தனா்.... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பொறுப்பேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினர... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 546 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 546 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க