செய்திகள் :

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

post image

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங்கரையோரம் மடத்துவிளை நிழல் தாங்கல் அமைந்துள்ளது. தற்போது நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதங்கோடு சாலைப் பாலம் முதல் ஆற்றங்கரை வரையிலான சுமாா் 100 மீ தூரம் அணுகுசாலை அகற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக 61 ஆண்டுகளாக வழிபாடுகள் நடைபெற்று வரும் நிழல் தாங்கல், அதையொட்டியுள்ள வீடுகளுக்கு செல்ல பாதை இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து, பாதை கோரி மக்கள் நான்குவழிச் சாலைப் பணிக்கு பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும், உரிய தீா்வு கிடைக்க தாமதமானால் தொடா் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனா்.

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வுடன் நிறைவடைகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்... மேலும் பார்க்க

பாறையை உடைத்து கடத்தியதாக 3 போ் கைது

புதுக்கடை அருகே நெடுந்தட்டு பகுதியில் பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். நெடுந்தட்டு பகுதியில் சிலா் பாறையை உடைத்துக் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தத... மேலும் பார்க்க