செய்திகள் :

அதானிதான் மோடியை இயக்குகிறார்! ஏழை மக்களின் வளங்களைத் திருடுவதே அவர்களின் இலக்கு! - ராகுல் பேச்சு

post image

அதானிதான் நரேந்திர மோடியை இயக்குகிறார் என ஒடிசாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"ஒடிசா, சத்தீஸ்கரில் ஒலிக்கும் ஒரே பெயர் அதானிதான். ஒடிசாவைப் பொருத்தவரை அதானிதான் ஒடிசா அரசை இயக்குகிறார். அதானிதான் நரேந்திர மோடியையே இயக்குகிறார். புரி ஜெகந்நாதா் ரத யாத்திரையில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அன்று யாத்திரை நடைபெறும்போது அதானி மற்றும் அவரது குடும்பத்திற்காக தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே ஒடிசா அரசு எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். அதானி போன்ற 5- 6 பணக்காரர்களுக்காக இயங்கும் அரசு இந்த அரசு. உங்களுடைய நிலங்களை, காடுகளை மற்றும் எதிர்காலத்தைத் திருடுவதே அவர்களின் இலக்கு.

நான் ஒன்று கேட்கிறேன், இந்த அரசு எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது? பெரிய பெரிய நிறுவனங்கள் வருகின்றன. ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

அவர்களின் உங்களின் நிலங்களை, பணத்தை, இயற்கை வளங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

உங்களின் சிறு வியாபாரங்களை முதலில் அழித்து உங்களுடைய நிலங்களை, தண்ணீரை, காடுகளை எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஏழை மக்களிடம் இருந்து அனைத்தையும் திருடுவதே ஒடிசா பாஜக அரசின் ஒரே வேலை. முன்னதாக பிஜேடி அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசு இதனைச் செய்கிறது.

ஒருபுறம் ஒடிசாவின் ஏழை மக்கள். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள். மறுபுறம் 5- 6 பணக்காரர்களும் பாஜக அரசும்.

ஒடிசா மக்களுடன் இணைந்து வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசினார்.

While addressing a public gathering in Odisha's Bhubaneshwar, Rahul said that Adani runs Narendra Modi.

இதையும் படிக்க | பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க