செய்திகள் :

அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!

post image

மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.

மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தினை ஏற்படுத்திய கனரக லாரி, அதானி குழுமத்துக்கு சொந்தமான சுரங்கத்தைச் சேர்ந்தது.

விபத்தில் இருவரும் பலியானது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்துடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, 5 பேருந்துகள், 3 லாரிகளுக்கு தீவைத்து கலவரத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்து கலவரம் செய்யவும் முயன்றனர். இருப்பினும், அதற்குள்ளாக அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வி... மேலும் பார்க்க

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ... மேலும் பார்க்க

புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்

‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள்: ‘தெலங்கானா அரசின் திட்டத்தை மத்திய அரசு ஏற்காது’

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்க்கும் தெலங்கானா அரசின் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்காது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்ப... மேலும் பார்க்க