செய்திகள் :

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

post image

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்களுடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் இன்று (மே 27) ஆலோசனை மேற்கோண்டார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் சரண் பிரகாஷ் பேசியதாவது,

''நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. கர்ப்பிணிப் பெண்கள், மூத்தக் குடிமக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். கரோனாவை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது. மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவுள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் இந்த அறிகுறிகள் மாணவர்களிடையே தென்பட்டால், பள்ளி நிர்வாகமும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரி இயக்குநர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினோம். இதில், கரோனா பரிசோதனைக்கான அனைத்து வசதிகளையும் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளேன்.

கரோனா பரவலைக் கண்காணிக்க சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு மண்டலவாரியாக பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் படுக்கை மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ள மருத்துவமனைகளின் தரவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | 2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பே... மேலும் பார்க்க

என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்த... மேலும் பார்க்க

கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஷாகுர் கான் என்பவரை, புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை ... மேலும் பார்க்க

மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து! ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொலி காட்சி மூலம் சிக்கிம் நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க