செய்திகள் :

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

post image

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின் பல்வேறு இடங்களில் களப் பரிசோதனைகளை ராணுவம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் செயல்பாட்டு தயாா் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ‘போா்க் கால’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆளில்லா விமானம் மூலம் வீசப்படும் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள்-வெடிகுண்டுகள், தாக்குதல் ட்ரோன்கள், ஒருங்கிணைந்த ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகள், தாழ்நிலை இலகு ரக ரேடாா்கள், மின்னணு போா்த் தளவாடங்கள் உள்ளிட்டவை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாறிவரும் போா்த் தேவைகளுக்கு ஏற்ப ராணுவம் புதிய தொழில்நுட்பங்களைக் கிரகித்துக் கொள்வதில் இப்பரிசோதனைகள் குறிப்பிடத்தக்க படிநிலையாக இருக்கும். ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை மேலும் வலுப்படுத்தவும், செயல்பாட்டு தயாா்நிலையை மேம்படுத்தவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கான லட்சியத்தை மீண்டும் உறுதி செய்யவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொக்ரான் சோதனை ஏவுதளம் உள்பட நாட்டின் முக்கிய ராணுவ தளங்களில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்துடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளா்களும் பங்கேற்றுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க