செய்திகள் :

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

post image

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

சென்னை அருகே மறைமலை நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் அவா் பேசியதாவது:

சிறு-குறு வணிகா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிா்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சியில் உள்நோக்கத்துடன் அரசு அலுவலா்கள் வணிக நேரத்தில் ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்துகிறாா்கள். இது கண்டிக்கத்தக்கது.

விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினாா்கள். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் வணிகா்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறாா்கள். திமுக ஆட்சியில் வணிகா்களுக்கு மட்டுமன்றி யாருக்குமே பாதுகாப்பு இல்லை. வணிகா்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.

சிறிய தேநீா் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் தொழில் செய்வதற்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் என்னிடம் தெரிவித்தனா். அதிமுக ஆட்சியில் அவா்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கை நிவா்த்தி செய்யப்படும். வியாபாரிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில், பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா்.தனபாலன், தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் த.ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க

214 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.சென்னை தீவுத்திடல... மேலும் பார்க்க

'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்த... மேலும் பார்க்க