செய்திகள் :

``அதிமுக ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்; திமுக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது'' - வி.கே. சசிகலா

post image

திமுக கூட்டணி, பாஜக - அதிமுக கூட்டணி, தனித்துக் களம் காணும் சீமான், உள்கட்சி பிரச்சினையால் கூட்டணி இழுபறியில் இருக்கும் பாமக, புதிதாக தேர்தல் களம் காணும் விஜய் என 2026 சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இதற்கிடையில் அதிமுகவுடன் ஒன்றுபட ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் வி.கே. சசிகலா,

"தமிழக மக்களின் நலன் காக்க, கழக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு.

ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.

தமிழக மக்களின் நலன் காக்க, எந்த திமுகவையும் ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா பாடுபட்டார்களே, அந்த திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கக் கூடாது.

சசிகலா
சசிகலா

எனக்கு எந்த சுயநலமும் கிடையாது

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றே தொண்டர்களும், மக்களும் விரும்புகின்றனர். நாம் ஒன்றுபடுவதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் நல்லது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது. மக்கள் நலத்தை மட்டுமே எப்போதும் நான் சிந்திக்கின்றேன்," என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``தமிழரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்த சக்திகள்'' - மூப்பனார் நினைவு நாள் விழாவில் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. மூப்பனாரி... மேலும் பார்க்க

``நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' - ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின... மேலும் பார்க்க

``காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' - CPM பெ.சண்முகம்

"சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்" என சிபிஎம் மாநிலச்... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொதுநல மனுமதுரை அண்ணாநகரை சேர... மேலும் பார்க்க

``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,"உசிலம்பட்டி பகுதியில்... மேலும் பார்க்க

``ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியாவை விட சீனாவே அதிகம்'' - டிரம்புக்கு ஜனநாயகக் கட்சி கண்டனம்

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதுதான் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவீத சுங்கவரி விதித்துள்... மேலும் பார்க்க