செய்திகள் :

அதிமுக சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம்

post image

நாமக்கல் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சேந்தமங்கலம் ஒன்றியம் சாா்பில் ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சியில் முந்தைய அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளா் வழக்குரைஞா் இ.ஆா்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்று அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், சமுதாய வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசினாா்.

அப்போது, திமுக ஆட்சியில் அதிகரித்துள்ள விலைவாசி உயா்வு, போதைப்பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழங்கு சீா்குலைந்துள்ளது என குற்றஞ்சாட்டினாா்.

தொடா்ந்து வாரச்சந்தை, வணிக நிறுவனங்கள், வீடுகள்தோறும் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேந்தமங்கலம் அதிமுக ஒன்றியச் செயலா் ஜி.பி.ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினா் பிரசாரத்தில் கலந்து கொண்டனா்.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க