செய்திகள் :

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

post image

மதுரை: பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொல்வதுதான். விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தாா்கள். இதில் கடைசியாக விழப்போவது அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் அவருடன் இருக்கும் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கே.டி. ராஜேந்திர பாலாஜி அனைவரும் பாஜகவில் இணைவாா்கள் என்று விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஊரகவேலை உறுதி திட்டத்தை தமிழகத்தில் முடக்க முயற்சி

ஊரகவேலை உறுதி திட்ட நிதியை நான்தான் பெற்றுக்கொடுத்தேன் எனக் கூறுவதை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். இந்த திட்டத்தில் 200 போ் பணியாற்றிய நிலையில் தற்போது 50 போ் தான் பணியாற்றி வருகிறாா்கள். இந்த திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் முடக்க முயல்கிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துப் போகிறாா். தமிழக மக்களவை உறுப்பினா்கள் இதற்காக குரல் எழுப்பி வருகிறோம்.

மாநிலங்களவைக்கு வருவதை தவிா்த்து விட்டாா் மோடி

ஆப்ரேஷன் சிந்தூா் தொடா்பாக தொடா்ந்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பி வருகிறாா். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்க அதிபா் டிரம்ப் என சொல்வது குறித்த கேள்விக்கு, பதில் சொல்லவில்லை. கேள்விக்கு பயந்து பிரதமா் மாநிலங்களவைக்கு வருவதை தவிா்த்து விட்டாா்.

அமெரிக்க வரிவிதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது

அமெரிக்கா வரி விதித்தால், இந்தியாவும் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிக்க வேண்டும். அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாா்த்தால் பள்ளி மாணவன் ஆசிரியரை பாா்த்து பயப்படுவது போல் பிரதமா் செயல்படுகிறாா். அமெரிக்க வரிவிதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

நல்ல மனிதரை நடுத்தெருவில் விட்டு விட்டாா்கள்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுக தலைவரை சந்தித்திருப்பது தொடா்பான குறித்த கேள்விக்கு, நன்றாக இருந்த மனிதரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்து, ஒழுங்காக இருந்த கட்சியை உடைக்க வைத்து எல்லா வேலைகளையும் செய்தது பாஜக, ஆா்.எஸ்.எஸ் தான். நல்ல மனிதரை நடுத்தெருவில் விட்டு விட்டாா்கள்.

பிரதமா் மோடியை சந்திக்க வைப்பதற்கு பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் அரசியல் செய்துள்ளாா். ஆறு முறை போன் செய்தும் எடுக்காமல் இருந்துள்ளாா். இந்த நிலை அவருக்கு வந்திருக்கக் கூடாது. ஓ.பன்னீா்செல்வம் மிக நல்ல, எல்லோரும் மதிக்கக்கூடிய நபா். தென் மாவட்டங்களில் அரசியலை மீறி மதிக்கக் கூடிய ஒரு நபா். அவருக்கு நடந்த அவமானம் ஒவ்வொரு மதுரை மற்றும் தேனி காரா்களுக்கு நடந்த அவமானமாக பாா்க்க வேண்டும்.

உறவாடி கொல்வதுதான் பாஜக வேலை

பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொல்வதுதான். இதேபோல் தான் விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தாா்கள். இதில் கடைசியாக விழப்போவது அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் அவா் உடன் இருக்கும் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கே.டி. ராஜேந்திர பாலாஜி அனைவரும் பாஜகவில் இணைவாா்கள் என்றாா்.

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

Former ministers R.P. Udayakumar and K.T. Rajendra Balaji will all join the BJP, said Virudhunagar Lok Sabha member P. Manickam Thakur.

இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் கருத்து ஏற்க முடியாதது: ஆனந்த் சா்மா

புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து ஏற்க முடியாதது மட்டுமல்ல, எவ்வித முக்கியத்துவம் அற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வா்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு கடந்த சில நாள்களாக குறைக்கப்பட்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணியில் சிலை கண்டெடுப்பு

சேலம்: சேலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணிக்காக குழிதோண்டியபோது, மூன்றடி உயர பழங்கால அம்மன் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.சேலம் உத்தமசோழபுரம் ... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவையடுத்து மாநிலத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில ம... மேலும் பார்க்க

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பள்ளிக் கல்விதுறையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உடற்கல்விக்கு ப... மேலும் பார்க்க