செய்திகள் :

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

post image

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஊழல் நடவடிக்கைகள் நடந்ததாகக் கூறி, ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷியின் தேர்தலை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்காஜி பகுதியில் வசிக்கும் கமல்ஜித் சிங் துக்கல், ஆயுஷ் ராணா ஆகியோர் அதிஷியின் தேர்தலை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவில், அவரும் அவரது தேர்தல் முகவர்களும் தேர்தலின்போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ​​இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் மனுவில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டதற்கு ஆட்சேபனை எழுப்பினார்.

நீதிபதி ஜோதி சிங், இந்தியத் தேர்தல் ஆணையம், தில்லி காவல்துறை, அதிஷி தேர்தலில் வெற்றி பெற்ற கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டது.

கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?

19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம... மேலும் பார்க்க

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க