செய்திகள் :

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

post image

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களில் இரண்டு உடல்கள் மாற்றி அனுப்பிவைக்கப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாருக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

மேலும், இந்திய நாட்டு அதிகாரிகள், பிரிட்டன் நாட்டின் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்றும், பிரிட்டன் நாட்டவரின் உடல்கள் அதீத கவனத்துடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டிலிருந்து வந்திருக்கும் தகவலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம், எங்கள் கவனத்துக்கு வந்திருக்கும் இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்துகிறது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில், அனைத்து விதமான கோட்பாடுகளும், தகவல் தொழில்நுட்ப முறைமைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜராகவில்லை

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி புதன்கிழமை ஆஜராகவில்லை. சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டி விளையாடுவதற்கான பல சூதாட்ட செயலிகள், முறைகேடான வழி... மேலும் பார்க்க

தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது

தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறித்து உத்தர பிர... மேலும் பார்க்க

‘இந்தியாவில் குறைந்துவரும் நுகா்வு சமத்துவமின்மை’

இந்தியாவில் நுகா்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணா் ஃபல்குனி சின்ஹா ஆகியோா் தெரிவித்துள்ளனா். இது தொடா்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

நமது நிருபர்கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார். இது தொடர்... மேலும் பார்க்க

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்

நமது சிறப்பு நிருபர்பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நமது நிருபர்மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேச... மேலும் பார்க்க