செய்திகள் :

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்

post image

நமது சிறப்பு நிருபர்

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக குழுத்தலைவர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கே அளித்துள்ள பதிலில், "வால்மீகி சமூகத்தை பட்டியலினத்தில் சேர்க்க தமிழக அரசிடமிருந்து வந்த முன்மொழிவை இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதில் ஏதேனும் ஆட்பேசனை இருந்தால் தமிழக அரசுக்குத் முறைப்படி தெரிவிக்கப்பட்டு உரிய திருத்தங்களை நிவர்த்தி செய்து அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு திறன் மேம்பாடு மற்றும் வருவாயைப் பெருக்க பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம் மூலம் வேலைûவாய்ப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதிலில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காகரூ. 124.12 கோடி அனுமதிக்கப்பட்டு 24,806 பேர் பயனடைந்துள்ளனர்' என்று கூறியுள்ளார். மேலும், இந்த திட்டங்களுக்காக தமிழகத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.602.68 கோடி ஒதுக்கப்பட்டதில் தமிழக அரசு ரூ. 518.56 கோடியைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க