செய்திகள் :

அதென்ன 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?

post image

இந்தியாவில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் மிக முக்கிய பதவியை வகிப்பவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒருவருக்கு எந்தவிதமான பாதுகாப்பு வழங்குவது என்பது அவர் வகிக்கும் பதவி மற்றும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது.

நாட்டிலேயே மிக முக்கிய பாதுகாப்பு என்றால் அது சிறப்புப் பாதுகாப்புக் குழு எனப்படும் எஸ்பிஜி பாதுகாப்புத்தான். இதுதான் நாட்டின் குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்படும். 180 வீரர்களைக் கொண்ட மெய்க்காவலர் படைப்பிரிவாகும் இது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகுதான், இந்த முக்கியத்துவம் வாய்ந்த எஸ்பிஜி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. அதுபோல, பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த பாதுகாப்புதான் அளிக்கப்படும். துணை ராணுவப் படையிலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டது இப்படை. தற்போது இப்படையில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.

அடுத்து இசட் பிளஸ் பாதுகாப்பு..

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு படைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களால் அமைக்கப்பட்டிருப்பது இசட் பிளஸ் பாதுகாப்புப் படை. முன்னாள் தலைவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் இந்தப் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

ஒரு தலைவருக்கு, குண்டு துளைக்காத வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் பிரிவில் பணியாற்றுவார்கள்.

பிறகு இசட் பிரிவு

தேசிய பாதுகாப்புப் படையில் இருக்கும் வீரர்கள் ஆறு பேரும், காவல்தறையினர் 22 பேரும் இணைந்து அளிக்கப்படும் பாதுகாப்பு இசட் பிரிவு. உளவுத் துறையின் பரிந்துரையின்படி, உயிருக்கு ஆபத்து இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். இந்த பாதுகாப்பைப் பெற்றவர்களுக்கு அதிகபட்சம் 3 வீரர்கள் ஆயுதத்துடன் எப்போதும் அவருடன் இருப்பார்கள். மாநிலத்துக்கு ஒரு சிலர்தான் இந்தப் பாதுகாப்பைப் பெற்றிருப்பார்கள்.

அடுத்து வருவது ஒய் பிளஸ் பாதுகாப்பு

சில முக்கிய தலைவர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இவர்களது வீட்டுக்கு 6 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியாற்றுவார்கள். உதாரணமாக நமது நாட்டில் கங்கனா ரனாவத்துக்கு இந்தப் பாதுகாப்புத்தான் வழங்கப்பட்டுள்ளது.

ஒய் பிரிவு பாதுகாப்பு (விஜய்க்கு வழங்கப்பட்டிருப்பது)

தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 8 பேர் கொண்டதாக இப்பாதுகாப்பு அமைந்துள்ளது. இந்த பாதுகாப்பானது ஒருவர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ, அங்கு மட்டுமே வழங்கப்படும்.

தற்போது நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு எதிராக வந்த சில கருத்துகளால், இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில்லாமல், எக்ஸ் பிரிவும் உள்ளது. இதில், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இடம்பெறாமல், காவல்துறையினர் மட்டுமே இருப்பர்.

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வி... மேலும் பார்க்க

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ... மேலும் பார்க்க

புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்

‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள்: ‘தெலங்கானா அரசின் திட்டத்தை மத்திய அரசு ஏற்காது’

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்க்கும் தெலங்கானா அரசின் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்காது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்ப... மேலும் பார்க்க