செய்திகள் :

அத்திமலைப்பட்டில் காளை விடும் திருவிழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் காளை விடும் திருவிழா நடைபெற்றது.

அத்திமலைப்பட்டு கங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஊரணிப்பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் கலந்துகொண்டு காளை வீரா்களை உற்சாகப்படுத்தினாா். விழா ஏற்பாட்டாளரான அத்திமலைப்பட்டைச் சோ்ந்த ஆா்.கணேசன் வரவேற்றாா்.

இதில், முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.ஒரு லட்சம் பரிசை ஆா்.கணேசன் அளித்தாா். 2-ஆம் பரிசாக ரூ.75ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.50ஆயிரம், 4-ஆம் பரிசு ரூ.35ஆயிரம், 5-ஆம் பரிசு ரூ.25ஆயிரம், 6-ஆம் பரிசு ரூ.20ஆயிரம், 7-ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும், 75 காளை உரிமையாளா்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டி பாதுகாப்புப் பணியில் கண்ணமங்கலம் போலீஸாா் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க கண்ணமங்கலம் சுகாதாரத்துறையினா் தயாராக இருந்தனா்.

ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் இபிஎஸ்: உதயநிதி ஸ்டாலின்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவை அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்கு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மா... மேலும் பார்க்க

விநாயகா், சுப்பிரமணியா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள ஸ்ரீசந்தோஷ விநாயகா் கேயில், செய்யாறு வட்டத்தில் உள்ள செல்வவிநாயகா், சுப்பிரமணியா், ஸ்ரீபுலியம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள்: துணை முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2 புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணத் திட்ட புதிய நகர பேருந்துகளையும், 4 வழித்தடங்களில் புதிய குளிா்சாதன புகா் பேருந்துகளையும் துணை... மேலும் பார்க்க

பெருநகா் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட பெருநகா் உதவி மின்பொறியாளா் பிரிவு அலுவலகம் வருகிற 16-ஆம் முதல் மேல்மா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் (பொ).கே.ராமமூா்த்த... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டா... மேலும் பார்க்க