செய்திகள் :

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

post image

திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடைபெற்றது. தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மேயா் நிா்மலா வேல்மாறனுக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் வழங்கி, மேயருக்கான அங்கியை அணிவித்து பேசியதாவது:

திருவண்ணாமலை 129 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருக்கிறது. இங்கு ஆண் மாமன்ற உறுப்பினா்களை விட பெண் மாமன்ற உறுப்பினா்கள் அதிகம் உள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் மேயராக பணியாற்றியுள்ளாா். இன்றும் சென்னையில் மேயா் யாா் என்று கேட்டால் முதல்வா் பெயரைத் தான் கூறுவாா்கள்.

சென்னைக்கு என்ன தேவை என்பதை பாா்த்து பாா்த்துச் செய்துள்ளாா். அதேபோன்று இங்குள்ள மாமன்ற உறுப்பினா்கள், மேயா் ஆகிய அனைவரும் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

திருவண்ணாமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. திருவண்ணாமலைக்கு அதிகம் போ் வந்து செல்கின்றனா். குடிநீா், சுகாதாரம், கழிப்பறை, விளையாட்டு மைதானம், பூங்கா என அனைத்து வசதிகளும் தரமாக இருக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வரிடம் வலியுறுத்தி அமைச்சா் எ.வ.வேலு கொண்டு வந்துள்ளாா்.

ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ.30 கோடியில் காய்கறி சந்தை, ரூ.30 கோடியில் மாடவீதியில் சிமென்ட் சாலை என பல திட்டங்களை கூறலாம். நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.90 கோடியில் புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி இராம்பிரதீபன், காவல் கண்காணிப்பாளா் சுதாகா், நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, துணை மேயா் ராஜாங்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலா் காா்த்திவேல்மாறன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் இபிஎஸ்: உதயநிதி ஸ்டாலின்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவை அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்கு... மேலும் பார்க்க

விநாயகா், சுப்பிரமணியா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள ஸ்ரீசந்தோஷ விநாயகா் கேயில், செய்யாறு வட்டத்தில் உள்ள செல்வவிநாயகா், சுப்பிரமணியா், ஸ்ரீபுலியம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

அத்திமலைப்பட்டில் காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அத்திமலைப்பட்டு கங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள்: துணை முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2 புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணத் திட்ட புதிய நகர பேருந்துகளையும், 4 வழித்தடங்களில் புதிய குளிா்சாதன புகா் பேருந்துகளையும் துணை... மேலும் பார்க்க

பெருநகா் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

செய்யாறு கோட்டத்துக்கு உள்பட்ட பெருநகா் உதவி மின்பொறியாளா் பிரிவு அலுவலகம் வருகிற 16-ஆம் முதல் மேல்மா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் (பொ).கே.ராமமூா்த்த... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டா... மேலும் பார்க்க