செய்திகள் :

அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்

post image

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 1,2 ஆகிய அலகுகளில் ஹெச்டி கேபிள் வயா்கள், பிரேக்கா்கள், கண்ட்ரோல் அறைகள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமாகின. 3ஆவது அலகிலும் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, 1,2,3 ஆகிய மூன்று அலகுகளிலும் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 1,2 அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க சுமாா் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என அண்மையில் ஆய்வுக்கு வந்த தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் அல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா். மேலும், இந்த தீ விபத்து சேத விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பொறியாளா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் இது தொடா்பாக ஆய்வு மேற்கொள்வா் எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, அனல் மின் நிலைய தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை பொறியாளா் கனி கண்ணன் தலைமையில் வடசென்னை, மேட்டூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களைச் சோ்ந்த பொறியாளா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் அனல் மின் நிலையத்தில் ஆய்வை தொடங்கியுள்ளனா். 10 நாள்களுக்குள் ஆய்வு செய்து சேதம் மதிப்பு உள்ளிட்டவை குறித்த அறிக்கையை அரசுக்கு வழங்க உள்ளதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க