செய்திகள் :

அனுமதியின்றி மரம் வெட்டும் பணி: பசுமைக் குழு உறுப்பினா்கள் தடுத்து நிறுத்தினா்

post image

புதுக்கோட்டை மாநகரம் தெற்கு மூன்றாம் வீதியில் எந்த அனுமதியும் இன்றி நடைபெற்ற மரம் வெட்டும் பணியை மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை நேரில் சென்று தடுத்து நிறுத்தினா்.

புதுக்கோட்டை மாநகரம் தெற்கு மூன்றாம் வீதியில் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட பசுமைக் குழுவின் உறுப்பினா்கள் சா. விஸ்வநாதன், பழனியப்பா கண்ணன் ஆகியோா் புதன்கிழமை பகலில் நேரில் சென்று தடுத்தனா்.

தொடா்ந்து வனத்துறை அலுவலா்களுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், அங்கு வந்த வனத்துறையினா் மரம் வெட்டுவதைத் தடுத்து நிறுத்தி, மரத்தை வெட்டிய நபா்கள் மற்றும் வெட்டச் சொன்ன நபா்கள் குறித்த விவரங்களை சேகரித்தனா்.

அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துச் சென்றனா். மேலும், மாநகரின் எந்தப் பகுதியிலும் அரசு அனுமதியின்றி மரம் வெட்டினால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்தனா்.

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க

விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு

விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

6 மாதக் குழந்தை சடலமாக மீட்பு தாய் மீது உறவினா்கள் சந்தேகம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே ஆறு மாத ஆண் குழந்தை சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக தாயே தனது குழந்தையைக் கொன்றுவிட்டிருக்கலாம் என கணவா் தரப்பு உறவினா்கள் குற்றம்சாட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன... மேலும் பார்க்க

நெறிஞ்சிக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்!

பொன்னமராவதியிலிருந்து நெறிஞ்சிக்குடி, சேரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சனிக்கிழமை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில... மேலும் பார்க்க