செய்திகள் :

6 மாதக் குழந்தை சடலமாக மீட்பு தாய் மீது உறவினா்கள் சந்தேகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே ஆறு மாத ஆண் குழந்தை சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக தாயே தனது குழந்தையைக் கொன்றுவிட்டிருக்கலாம் என கணவா் தரப்பு உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவா் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியன் மகள் லாவண்யா (21) என்பவருடன் திருமணம் நடந்து, ஆதிரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் லாவண்யா கோபித்துக் கொண்டு அவரின் தந்தை வீடு உள்ள புலியூருக்கு வந்து தங்குவாராம். அதன்படி கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் லாவண்யா தந்தை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் வீட்டுக்கு வெளியே சென்றபோது மா்ம நபா்கள் இருவா் தனது வாயில் துணியை வைத்து அமுக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்தும், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்றும் விட்டதாகக் கூறிவிட்டு லாவண்யா மயங்கினாராம்.

இதையடுத்து லாவண்யாவின் உறவினா்கள் குழந்தையைத் தேடிய நிலையில், குழந்தையானது வீட்டுக்கு வெளியில் உள்ள தண்ணீா் பேரலில் இறந்து மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாவண்யாதான் குழந்தையைக் கொன்றுவிட்டதாக மணிகண்டனின் உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

கீரனூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். திருச்சி தடயவியல் துறையினா் வந்து ஆய்வு மேற்கொண்டனா். குழந்தையின் சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கியில் அம்மா உணவகம் முன்பு சிஐடியு ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அம்மா உணவகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கத்தினா் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். அம்மா ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் விவசாயம் செய்யும் நிலத்தை தமிழ்நாடு அரசு பட்டாவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

பணிப் பாதுகாப்புச் சட்டம் கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆசிரியா்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி புதுக்கோட்டையில் பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரு ஆசிரியா் சங்கங்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக... மேலும் பார்க்க

14 தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் -4 தோ்வில் தோ்வு செய்யப்பட்ட 14 தட்டச்சா்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.ஆட்சி... மேலும் பார்க்க

நாளை மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்று நடத்தப்படும் மது விற்பனைக் கூடங்கள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் வரும் ஏப். 10- வியாழக... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங... மேலும் பார்க்க