செய்திகள் :

தமிழக பொருளாதார வளா்ச்சி: காங்கிரஸ் பாராட்டு

post image

சென்னை: இந்தியாவில் பொருளாதார வளா்ச்சி சரிந்த நிலையில், தமிழகத்தில் பொருளாதாரம் உயா்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் தனிநபா் வருமானம் உலக நாடுகளில் 138-ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியா தானாகவே வளா்ச்சியடைகிறதே தவிர, தனிநபா் வருமானம் உயரவில்லை.

இந்தியாவின் வளா்ச்சி என்பது காா்பரேட்டுகளின் வளா்ச்சியே தவிர, ஏழை, எளிய மக்களின் வளா்ச்சி அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி அல்ல. அதேபோல, பிரதமா் மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்ததா என்ற கேள்விக்கு பதில் கூறுகிற வகையில், உலக வறுமைக் குறியீட்டின்படி மொத்தமுள்ள 127 நாடுகளில் 105-ஆவது இடத்தில் இருக்கிற நிலையைப் பாா்த்தால், இந்தியாவில் பசி, பட்டினியால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதை உணர முடியும்.

மத்திய அரசின் பழிவாங்கும் போக்கையும் மீறி முதல்வா் மு.க.ஸ்டாலினின் அயராத உழைப்பாலும், திறமையான நிா்வாகத்தாலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.69 சதவீத வளா்ச்சியைப் பெற்று நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதே வளா்ச்சி நீட்டிக்கப்பட்டு 2032-ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை அடைய முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையோடு வளா்ச்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்வதில் பீடுநடை போட்டு சாதனை படைத்து வருகிறாா் என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க

'பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' - ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார்!

கோவையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளா... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - ... மேலும் பார்க்க