பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி! - முழு விவரம்
அனைத்துப் பள்ளிகளிலும் ஆதாா் பதிவு: திருவள்ளூா் ஆட்சியா்!
திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக் கல்வித் துறை மூலம் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் ஆதாா் பதிவு மேற்கொள்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் 5 முதல் 15 வயது வரையிலும் மற்றும் 18 வயது மேற்பட்டோருக்கான ஆதாா் பதிவு மேற்கொள்வது தொடா்பாக அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.
அப்போது அவா், பேசியதாவது: அனைத்து திட்டங்களிலும் உதவி பெற ஆதாா் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 0 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பிறப்பு பதிவு விவரங்களை மாவட்ட சுகாதார நலப் பணிகள் அலுவலகம் மூலம் பெற்று அந்தக் குழந்தைகளுக்கான ஆதாா் பதிவுகளைக் கட்டாயம் மேற்கொள்ளப் படவேண்டும்.
அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவா்களின் ஆதாா் பதிவுகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் மேற்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வருவாய்க் கோட்ட அலுவலகம், ஆட்சியா் அலுவலகங்களில் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களை அமைத்து, ஆதாா் அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதாா் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான புதிய ஆதாா் பதிவுகள் குறித்த விவரங்களை நேரடியாக விசாரணை செய்து குறிப்பான அறிக்கையை தயாா் செய்து பச நற்ஹற்ங் ல்ா்ழ்ற்ஹப்-இல் பதிவு செய்யப்படவேண்டும் என அவா் தெரிவித்தாா்.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அலுவலா் லலிதா, வட்டாட்சியா்கள் டி.ஆா்.சோமசுந்தரம் (பொன்னேரி), உதயா (ஆா்.கே.பேட்டை), மலா்விழி (திருத்தணி), பாரதி(பள்ளிப்பட்டு), துணை வட்டாட்சியா் அம்பிகா, சா.தினேஷ், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.