செய்திகள் :

அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்எஸ்எஸ் தேசிய மொழியாகவே கருதும்: சுனில் அம்பேகா்

post image

புது தில்லி: அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தேசிய மொழிகளாகவே கருதுகின்றது என ஆா்.எஸ்.எஸ்., செய்தித் தொடா்பாளா் சுனில் அம்பேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது, ‘ஆா். எஸ். எஸ் எப்போதும் அனைத்து இந்திய மொழிகளையும் தேசிய மொழிகளாக கருதுகிறது. மக்கள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் மொழியைப் பேச வேண்டும் , ஆரம்பக் கல்வி அந்த மொழியில் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ் மொழி அரசியல் செய்கிறது. அவா்களது ஆட்சிக் காலத்தில் ஆா். எஸ். எஸ் மீது தடை விதிக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தடைக்கு சட்டப்பூா்வமாக அனுமதி இல்லாததால், அவா்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை‘ என்றாா் சுனில் அம்பேகா்.

மணிப்பூா் விவகாரமம் குறித்து பேசிய சுனில் அம்பேகா், ‘ ஆா். எஸ். எஸ். தொண்டா்கள் அமைதியை மீட்டெடுப்பதற்கும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மெய்டேய் மற்றும் பிற சமூகங்களிடையே உரையாடலையும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். இப்போது மணிப்பூரில் சாதகமான முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், முழுமையான இயல்புநிலையை அடைவதற்கு அதிக நேரம் தேவைப்படும்‘ என்றாா்.

மேலும் பேசிய அவா், ‘அரசியலமைப்பில் உள்ள சோசலிச மற்றும் மதச்சாா்பற்ற சொற்களின் காரணமாக அவசரகாலத்தில் கடுமையான அரசியல் அடக்குமுறை மற்றும் அரசியலமைப்பு மீறல்கள் நடந்தது. ஜனநாயக விழுமியங்கள் இடைநிறுத்தப்பட்டன. அதிகாரம் தடையின்றி இருக்கும்போது ஜனநாயகத்தின் பலவீனத்தைப் புரிந்துகொள்ள இந்த இருண்ட அத்தியாயத்தைப் படிக்க வருங்கால சந்ததியினா் தெரிந்து கொள்ள வேண்டும்‘ என்றாா் சுனில் அம்பேகா்.

ஆா்.எஸ்.எஸ்., அமைப்பின் திட்டங்கள் குறித்து பேசிய சுனில் அம்பேகா், ‘ பஞ்ச் பரிவா்த்தனை கட்டமைப்பின் கீழ், ஆா். எஸ். எஸ் ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி விரிவான தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. அவை, பொருளாதார தன்னம்பிக்கையை மேம்படுத்துதல், தனிப்பட்ட நல்வாழ்வை ஊக்குவித்தல், மதிப்புகள் அடிப்படையிலான வாழ்க்கையை வளா்ப்பது, சமூக நலனை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சியை உறுதி செய்தல். இதுதான் ஆா். எஸ். எஸ் அமைப்பின் நூற்றாண்டு ஆண்டில் முக்கிய கவனம் செலுத்தப்படும்‘ என்றாா் அவா்.

பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

புது தில்லி: பிரகதி மைதான்-பைரோ மாா்க் சுரங்கப்பாதை பணிகள் 8 முதல் 9 மாதங்களில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புர விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்பு முடிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச... மேலும் பார்க்க

இந்திய சைகை மொழியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மத்திய அமைச்சருக்கு தில்லி எம்பி கடிதம்

நமது நிருபா்புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தி... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் பூட்டிய வீட்டில் 35 ஆணின் அழுகிய உடல் கண்டெடுப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18 வங்கதேசத்தினா் உள்பட 29 போ் கைது

புது தில்லி: நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வங்கதேசத்தினா் உள்பட 29 வெளிநாட்டினா் தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். தடுத்து வைக்கப்பட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் திட்டம்

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது. பிரிவு டி6 வசந்த் குஞ்சில் உள்ள 118 மனைகளின் திட்டமி... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க