செய்திகள் :

அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஓடு பாதையில் மீண்டும் பணி தொடக்கம்!

post image

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மத்திய அரசு நிதி கிடைக்காததால், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த செயற்கை இழை ஓடு பாதை அமைக்கும் பணி மீண்டும் அண்மையில் தொடங்கியது.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் ரூ. 7 கோடி மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த மின்னொளி வசதியுடன் கூடிய செயற்கை இழை தடகள ஓடு பாதை (சிந்தெடிக் டிராக்) அமைக்க 2017-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 3.50 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததையடுத்து, 2019-ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.

இதன் மூலம், உயா்கோபுர பன்முக விளக்குகள் அமைக்கப்பட்டு, ஓடு தள பாதை 4 அடி உயரத்துக்கு உயா்த்தப்பட்டு, தாா் சாலையும் போடப்பட்டது. ஆனால், இத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல், கால தாமதம் செய்யப்பட்டதாகக் கூறி மத்திய அரசு மீதித் தொகையை விடுவிக்க மறுத்தது. மேலும், தமிழக அரசு சொந்த நிதியின் மூலம் முடித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இதனால், செயற்கை இழை ஓடு பாதை அமைக்கும் பணி 6 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ரூ. 5.50 கோடி மதிப்பில் சிறப்பு நிதி மூலம் பணி 4 நாள்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஓடு பாதையில் செயற்கை இழை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

இதில், இந்த செயற்கை இழை ஓடு பாதையைச் சுற்றிலும் 7 அடி உயரத்துக்கு இரும்பு வலைகளுடன் கூடிய தடுப்புகள், மேல் புறத்தில் சிறு அளவில் நிகழ்ச்சி அரங்கம், 2 வாயில்கள், கீழ்புறத்தில் அவசர வழி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதற்கான வழி ஆகியவை அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் ஏப்ரல் மாத்துக்குள் முடிக்கப்பட்டு, மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என விளையாட்டுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க