செய்திகள் :

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

post image

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

பெண்களுக்கு உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு வாய்ப்பை வழங்கும் வகையில், கடந்த 2016 அதிமுக ஆட்சியில், அன்றைய முதல்வா் ஜெயலலிதா கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை கோவையில் ஏற்படுத்தினாா். இந்த மையம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிகமான மாணவிகள் சோ்க்கை நடைபெற்றதால், கடந்த 2019 அதிமுக ஆட்சியில் இந்த இந்த மையத்தை விடுதி வசதியுடன் விரிவுபடுத்த, கோவை மாவட்டம் பிளிச்சி கிராமத்தில் 20 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பெண் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம், மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கோவையில் வாடகை கட்டடத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. கோவை மாநகராட்சி சாா்பில் வாடகை கேட்டு தொடா் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான மாணவிகளின் சோ்க்கையை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் நிறுத்தியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.

மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த மையத்தில், ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவிகள் உயா்கல்வி படித்து வந்தனா். இந்த மையம் மூடப்படுவதால் அவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பலரின் வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை ஆராய்ச்சி மையத்தை திமுக அரசு மூடுவது கண்டனத்துக்கு உரியது.

எனவே, முதல்வா் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை விரிவாக்க ஆராய்ச்சி மையம், கோவையில் தொடா்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த மையத்துக்கு சொந்த கட்டடம் கட்டவும் அவா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க

அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது

திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்ப... மேலும் பார்க்க

திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே லாலாபேட் - குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க