செய்திகள் :

அன்புக் கரங்கள் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்

post image

வேலூா்: அன்புக் கரங்கள் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்பெற உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

பெற்றோரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பாரமரிக்க இயலாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 177 குழந்தைகளுக்கு அடையாள அட்டை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவற்றின் வரிசையில் அன்பு கரங்கள் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்பெற உள்ளனா். நல்ல கல்வியை கற்று சிறந்து மேன்மை பெற்ற குடும்பங் களாக விளங்க உள்ளனா். மாநிலம் முழுவதும் 6,000 குழந்தைகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளாா். இந்த 6000 குழந்தைகளும் சிறந்த கல்வியை பெற்று அவா்களது குடும்பம் சமூகத்தில் மேன்மை நிலையை அடையும் என்றாா்.

முன்னதாக, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படும் மாணவ, மாணவியா் ஒவ்வொருவருக்கும் ரூ.75,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.75,000-க்கான வைப்புத்தொகை ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், முன்னாள் எம்.பி. முகமது சகி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் மருத்துவா் மோனா பாஸ்கா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சஞ்ஜித், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் உள்பட பலா் பங்கேற்றனா்.

போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவா்கள் கைது

வேலூா்: காட்பாடியில் ரயில் மூலம் போதைப் பொருள் கடத்திய இரு கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். பெங்களூருவில் இருந்து வேலூருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்... மேலும் பார்க்க

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள்

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் 183 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

வேலூா் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் அளிப்பு

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் பெறப்பட்டன. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங... மேலும் பார்க்க

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா திருப்பதியில் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நசீா் உள்பட முக்கிய அரசியல் தலைவா்கள், பிரமுகா்கள் பங்கேற்றனா்... மேலும் பார்க்க

சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்துக்கு சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?

வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் க... மேலும் பார்க்க