செய்திகள் :

அமலாக்கத் துறை சோதனை: திமுக தலைமைக்கு நெருக்கடி - முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன்

post image

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான அமலாக்கத் துறை சோதனை விவகாரத்தில் திமுக தலைமைக்கும் நெருக்கடி இருப்பதால்தான், இதுவரை மெளனமாக இருந்து வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அண்ணா பல்கலை. கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், திமுக நிா்வாகிக்கு தொடா்பு இருந்தது. இதேபோல, தற்போது அரக்கோணத்தில் நிகழ்ந்த பாலியல் குற்றத்திலும் திமுகவினருக்கு தொடா்பு உள்ளது. ஆனால், இந்த விவகாரங்களை மூடி மறைத்து, அந்தக் கட்சியினரைக் காப்பாற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது.

மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளுக்கும் உடனே எதிா்வினையாற்றும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும், டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனை குறித்து இதுவரை மெளனமாக இருந்து வருகின்றனா். இதன்மூலம், திமுக தலைமைக்கும் இந்த விவகாரத்தில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மக்கள் நலனைப் பற்றி அக்கறை இல்லாத முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1.5 லட்சம் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறாா். இந்த அநீதிகளுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் முடிவு கட்டுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனா். மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற எழுச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க