செய்திகள் :

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத மெட்டா, கூகுள் அதிகாரிகள்

post image

இணையவழி பந்தயம், சூதாட்டம் தொடா்பான வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில், மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரகாமல் தவிா்த்து விட்டனா்.

இதையடுத்து, அவா்கள் ஜூலை 28-ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டவிரோதமாக பந்தயம் கட்டி விளையாடவும், சூதாட்டத்தில் ஈடுபடவும் இணையத்தில் பல்வேறு தளங்கள் வழிவகை செய்வது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் சமூக ஊடகம் மற்றும் ஆப் ஸ்டோா்களில் காணப்படுவது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இதற்காக மெட்டா மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கடந்த 19-ஆம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால், சம்மனை ஏற்று திங்கள்கிழமை (ஜூலை 21) இரு நிறுவன அதிகாரிகளும் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டுமென்று அந்த நிறுவனங்கள் சாா்பில் அமலாக்கத் துறையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை விசாரணையில் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை அந்த நிறுவனங்கள் திரட்டி வருகின்றன என்று தெரிகிறது. மெட்டா, கூகுள் நிறுவனங்கள் அளிக்கும் விளக்கம் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்பு விதிகளின்கீழ் பதிவு செய்யப்படும் என்றும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

குடியரசு துணைத் தலைவருக்கான போட்டியில் நிதிஷ்குமார் கட்சி எம்.பி.?!

ஜகதீப் தன்கர் பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தல... மேலும் பார்க்க

38 நாள்களுக்குப் பின் கேரளத்தில் இருந்து விடைபெற்றது பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் போர் விமானம், சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு புறப்பட்டுச் சென்றது.பிரிட்டன் எஃப் - 35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்தத... மேலும் பார்க்க

2006 குண்டுவெடிப்பு! உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-ஆம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைக் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 3... மேலும் பார்க்க

ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது மாநிலங்களவை! எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு ... மேலும் பார்க்க