செய்திகள் :

38 நாள்களுக்குப் பின் கேரளத்தில் இருந்து விடைபெற்றது பிரிட்டன் போர் விமானம்!

post image

திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் போர் விமானம், சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு புறப்பட்டுச் சென்றது.

பிரிட்டன் எஃப் - 35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதியில் அவசரமாக தரையிறங்கியது.

பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான இந்த விமானம், திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பிய பிறகு மீண்டும் பறக்க முயன்றபோது, பழுதானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பழுதுநீக்கத்துக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே இருந்ததால், மீம்ஸ் விமர்சனத்துக்கும் இந்த விமானம் ஆளானது. கேரள சுற்றுலாத் துறையும் தனது பங்குக்கு பிரிட்டன் விமானம் தொடர்பான மீம்ஸ் ஒன்றை வெளியிட்டது.

இந்த விமானத்தை சரிசெய்வதற்காக பிரிட்டனில் இருந்து 25 பேர் கொண்ட விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் திருவனந்தபுரம் வந்தனர்.

பழுது சரிசெய்யப்பட்ட பின்னர், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எஃப் - 35 போர் விமானம் இன்று காலை பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்றது.

சிறப்புகள்...

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் இந்த ரக விமானம், போர்க்களத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது.

போர்க்களத்தின் முழுக் காட்சியையும் விமானிகளுக்கு காட்டும் தொழில்நுட்ப சென்சார்கள் கொண்டிருக்கும் இந்த விமானம், 51 அடி நீளமும், 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது.

இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் (ரூ. 859 கோடி) என்கின்றனர். திருவனந்தபுரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, இந்த விமானத்தின் அருகே யாரையும் செல்லவிடாமல், அதனருகே விமானி ஒருவரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் பாதுகாப்புப் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

A British fighter jet that made an emergency landing in Thiruvananthapuram departed for the motherland after about a month.

இதையும் படிக்க : ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநி... மேலும் பார்க்க

கட்சிரோலி வளர்ச்சியைத் தடுக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தும் நகர்ப்புற நக்சல்கள்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே இருந்துவரும் நகர்ப்புற நக்சல்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வருவதாக மாநில முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ் கூறினார்.கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு தி... மேலும் பார்க்க

ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.இதில், 6000mAh பேட்டரி திறன், 50... மேலும் பார்க்க

ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்

படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெர... மேலும் பார்க்க

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க