செய்திகள் :

வங்கதேச விமான விபத்து: `தீயில் எரிந்து கொண்டிருந்தனர்; கல்லாக...'- நேரில் பார்த்த ஆசிரியர் வேதனை!

post image

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் பயிற்சி விமானம் ஒன்று அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டதில் நேற்றுவரை 19 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன.

இன்று இவ்விபத்தின் பலி எண்ணிக்கை 27-ஆக உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கதேச வரலாற்றிலேயே இதுதான் மிகக் கோர விபத்தாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் வங்கதேச விமானப் படையின் பழைமையான விமானங்களில் ஒன்று இந்த எஃப்-7 பிஜிஐ விமானம் என்றும், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த விபத்தை அருகில் இருந்து நேரில் கண்ட பூர்ணிமா தாஸ் என்ற விபத்திற்குள்ளான பள்ளி மற்றும் கல்லூரியின் ஆசிரியர், "திடீரென காதைக் கிழிக்கும் சத்தம் இடியாக வந்து விழுந்தது. கொஞ்சம் நேரம் நிதானித்து என் அறையை விட்டு வெளியே பார்த்தால் எனக்கு 2 அடிக்கு அருகில் இருந்த மொத்தக் கட்டடமும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. தீயில் சிக்கி பலர் எரிந்து கொண்டிருந்தனர். ஏதும் செய்ய முடியாமல் கல்மாதிரி நின்று கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பாதிப்பில் சிக்காத மாணவர்களையெல்லாம் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பும் வேலையை அதித்தீவிரமாகச் செய்து கொண்டிருந்தோம். சுமார் 80% மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவிட்டோம்." என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.

மஹரின் (Maharin) என்ற ஆசிரியை விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த சில குழந்தைகளை காப்பாற்றி மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, சில மணிநேரத்திற்குப் பிறகு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த மாணவர்களும் மீட்புக் குழுவுடன் சேர்ந்து சக மாணவர்கள், நண்பர்களின் உடலை மீட்டு வரும் காட்சிகள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறி... மேலும் பார்க்க