செய்திகள் :

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

post image

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு வழக்கம்போல் தலைமைத் தாங்கினார்.

இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாநிலங்களவை அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் தலைமையில் கூடியது.

மேலும், மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அவையை வழிநடத்தவுள்ளார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகைக்கு நேரில் சென்ற ஹரிவன்ஷ், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவரா?

ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், 2020 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajya Sabha Deputy Chairman Harivansh Narayan met President Draupadi Murmu on Tuesday

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவருக்கான போட்டியில் நிதிஷ்குமார் கட்சி எம்.பி.?!

பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்

ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்க... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க