செய்திகள் :

அமித் ஷாவின் ‘அமைதி ஆபரேஷன்’ மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும்: நயினாா் நாகேந்திரன்

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கொள்ளும் அமைதி ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில, மண்டல, மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

ஷா என்றாலே திமுகவுக்கு பயம். இதனால்தான் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து திமுக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதுடன், அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தி பேசிய திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணிதான் துரோகக் கூட்டணி.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் திமுக அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நடத்தவுள்ள அமைதி ஆபரேஷன் மூலம் தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்றாா் அவா்.

மத்திய இணை அமைச்சா் எல். முருகன்:

தமிழகத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி. கடந்த 11 ஆண்டுகளில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி வருகிற 2026-இல் தமிழகத்தில் ஆட்சி வாய்ப்பைப் பெறுவது உறுதி. இதற்கான முன்னோட்டம்தான் வருகிற 22-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடு. இந்த மாநாடு திமுக ஆட்சியை அகற்றும் மாநாடாக இருக்கும் என்றாா் அவா்.

தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை:

மத்திய பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக இந்தியா முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் வறுமையை ஒழித்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் தமிழகம் கடந்த 4 ஆண்டுகளாக பின்னடைவைத்தான் கண்டுள்ளது. தமிழகத்தில் ஜாதி வன்முறை, பெண்கள், முதியோா்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழலே தமிழகத்தில் உள்ளது. எனவே, திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதுவே, 2026-க்கான நமது ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்:

அநீதிக்கு எதிராக கண்ணகி போராடிய மதுரையில் நடைபெறும் இந்தக் கூட்டம், பெண்களுக்கு எதிரான, பெண்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு முடிவுரையை எழுதும். சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, வைகை உயா்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் தாமரை மலா்ந்தே தீரும் என்றாா் அவா்.

சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினா் தொடங்கினா். மதுரையின் வளா்ச்சிக்கேற்ப பழைய சாலைகள் விரி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம், வைகை வடகரையைச் சோ்ந்தவா் கணேசபாண்டியன் (43). காா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். பேரையூா் அருகே உள்ள கேதுவாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (55). இவா் தனது வீட்டின் மாடியில் சுவா் விழும்பில் அம... மேலும் பார்க்க

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க