செய்திகள் :

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜாா்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றஞ்சாட்டி, பிரதாப் குமாா் என்பவா் வழக்கு தொடா்ந்தாா்.

முதலில் ராஞ்சியில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னா் 2021-இல் சாய்பாசாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சாய்பாசா நீதிமன்றம் ராகுல் காந்திக்கு உத்தரவிட்டது.

அன்றைய நாளில் ஆஜராக முடியாததால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்றக் கோரி ராகுல் காந்தி தரப்பில் ஜாா்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், புதன்கிழமை (ஆக. 6) ஆஜராகும்படி உத்தரவிட்டது.

அதன்படி, சாய்பாசாவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை காலை நேரில் ஆஜரானாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சுப்ரியா ராணி டிக்கா உத்தரவிட்டாா். மேலும், வழக்கில் தொடா்ந்து ஒத்துழைக்குமாறு ராகுல் காந்தியிடம் நீதிபதி கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜாா்க்கண்டின் முன்னாள் முதல்வரும், பழங்குடி சமூக தலைவருமான சிபு சோரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை மாநிலத்துக்கு வந்த ராகுல் காந்தி, ராஞ்சியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சாய்பாசாவுக்கு வந்தாா். அவரது வருகையையொட்டி சாய்பாசா நகரிலும், நீதிமன்ற வளாகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க