செய்திகள் :

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

post image

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இந்திய ரூபாய் குறித்து எளிய வார்த்தைகளில் விளக்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளார்.

அமெரிக்க டாலரை விட இந்திய ரூபாய் மூலம் இந்தியாவில் அதிக பொருட்களை வாங்க முடியும் என்பதை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெளிவாக விளக்கியிருக்கிறார் கிறிஸ்டன் ஃபிஷர்.

கிறிஸ்டன் தனது வீடியோவில் கூறியதாவது “ரூபாய் உண்மையில் டாலரை விட சிறந்ததா? இந்தியாவில் வாழ்வது எவ்வளவு மலிவானது என்று பேசும்போது, வாங்கும் திறன் (Purchasing Power Parity - PPP) குறித்து சொல்ல வேண்டும்.

இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அமெரிக்காவை விட மிகவும் குறைவு. அதாவது, இந்தியாவில் ஒரு ரூபாய், அமெரிக்காவில் ஒரு டாலருக்கு சமமான மதிப்பை விட அதிகமான பொருட்களை வாங்க முடியும். இதனால்தான் வாங்கும் திறன் பரிமாற்ற விகிதத்தில் ரூபாய் டாலரை விட உயர்ந்து காணப்படுகிறது.

அமெரிக்காவில் வருமானம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அங்கு எல்லாமே விலை உயர்ந்தவை. இந்தியாவில் வருமானம் குறைவாக இருக்கலாம்.

ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் குறைவு. உதாரணமாக இந்தியாவில் ஒரு முடி வெட்டுதலுக்கு சராசரி விலை 100 ரூபாய் ஆகும். ஆனால், அமெரிக்காவில் இதன் சராசரி விலை 40 டாலர்கள் (3,400 ரூபாய்) ஆகும்.

அதாவது அமெரிக்காவில் ஒரு முடி வெட்டுதலுக்கு செலவழிக்கும் பணத்தில் இந்தியாவில் 34 முடி வெட்டுதல்களைப் பெறலாம்” என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறது.

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) ... மேலும் பார்க்க

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க

US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்ச... மேலும் பார்க்க

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க