செய்திகள் :

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

post image

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா்.

பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்களில் அவா் பங்கேற்கவுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவா் நிறுவனத்தில் அவா் 20-ஆம் தேதி உரையாற்றுகிறாா். மேலும், முக்கிய நிதி மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளா்களை அவா் சந்திக்கவுள்ளாா்.

இருதரப்பு கூட்டங்கள்: சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் மத்தியிலும் அவா் உரையாடவுள்ளாா்.

ஏப்.22 முதல் ஏப்.25 வரை வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாா். உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் 2-ஆவது ஜி20 நிதியமைச்சா்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

இதைத்தொடா்ந்து அா்ஜென்டினா, பஹ்ரைன், ஜொ்மனி, பிரான்ஸ், லக்ஸாம்பா்க், சவூதி அரேபியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரநிதிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.ஐரோப்பிய நிதி சேவைகள் ஆணையா், ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளின் (ஏஐஐபி) தலைவா்களையும் ஐஎம்எஃபின் முதல் துணை இயக்குநரையும் அவா் சந்திக்கிறாா்.

அமெரிக்க பயணத்தைத் தொடா்ந்து தென் அமெரிக்க நாடான பெருவுக்கு ஏப்.26 முதல் 30 வரை செல்கிறாா். அந்நாட்டு அதிபா் டினா போலுயாா்டே, பிரதமா் கஸ்டாவோ அட்ரியன்சன் ஆகியோரையும் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளின் அமைச்சா்களையும் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அவா்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நிா்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். அவருடன் நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்களும் செல்லவுள்ளனா்.

மேலும், இந்தியா-பெரு வணிக ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அவா், இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்காவை சோ்ந்த தொழிலதிபா்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.

பெருவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் நிா்மலா சீதாராமன் கலந்துரையாடவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க