செய்திகள் :

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

post image

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார்.

அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த இந்தியா, தற்போது வரி இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசியல் விமர்சகர் ஸ்காட் ஜென்னிங்ஸ் உடனான வானொலி நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு, வணிகம் மற்றும் வரி விதிப்பு தொடர்பான நிர்வாகக் கொள்கைகள் குறித்துப் பேசினார்.

அதில், இந்தியா மீதான வரி விதிப்பு குறித்து டிரம்ப் பேசியதாவது,

''அவர்கள் எங்களுக்கு எதிராக வரிவிதிப்பை கடைப்பிடித்து வந்தனர். சீனா, வரி விதித்து எங்களை சீரழித்தது. இந்தியாவும் வரி மூலம் சீரழித்தது. பிரேசிலும் வரி மூலம் அதையேதான் செய்தது. ஆனால், மற்ற நாடுகளின் எந்தவொரு வல்லுநர்களைக் காட்டிலும் வரி விதிப்பை சிறப்பாக புரிந்துகொண்டேன்.

பிறகு என்னுடைய வரிவிதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மீதான வரியை அவர்கள் திரும்பப் பெறுகின்றனர். அதிக வரியை விதிக்கும் நாடு இந்தியா. ஆனால், இப்போது அவர்களே வரி விதிப்பு இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

நான் வரிவிதிப்பை கையில் எடுக்காவிட்டால், அமெரிக்க இறக்குமதிகளுக்கு இது நடந்திருக்காது. வரி விதிப்பு சலுகையை அவர்கள் வழங்கியிருக்க மாட்டார்கள். அதனால், வரி உயர்வை நாம் கொண்டிருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாம் வலுவாகிவருகிறோம். அவர்கள் இனி எதையுமே சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாக வணிகம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய பொருள்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு 50% வரி விதித்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பொருள்களுக்கான ஒருசில வரிகளை அரசு குறைத்தது.

அமெரிக்க வரி விதிப்பைத் தொடர்ந்து, சீனா, ரஷியா உடனான வணிக உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி களமிறங்கியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சமீபத்தில் சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கையும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும் சந்தித்துப் பேசினார்.

இதையும் படிக்க | சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை...

Trump says India kills us with tariffs, claims Delhi now offers 'no tariffs' to America

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க