செய்திகள் :

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

post image

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரித்துள்ளது. உலக வா்த்தக அமைப்பின் பாதுகாப்பு வரி நடவடிக்கைகள் தொடா்பான ஒப்பந்தத்தின் 12.5-ஆவது பிரிவின் கீழ் இந்தியா இதுகுறித்து நோட்டீஸை அளித்துள்ளது. உரிய அறிவிப்பு இல்லாமல் வரி நடவடிக்கைகளை ஒரு உறுப்பினா் எடுக்கும்போது, அதற்கு பதிலடி கொடுக்க இப்பிரிவு அனுமதிக்கிறது.

அமெரிக்காவின் இந்த வரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் அதிபா் டிரம்ப்பின் உத்தரவு மூலம் இந்த வரி விதிப்பு நீட்டிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த வரியால் இந்திய ஏற்றுமதியில் 760 கோடி டாலா் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 191 கோடி டாலருக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பதிலடி வரிகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பின்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதுதொடா்பான உலக வா்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாக இந்தியா வாதிடுகிறது. அதாவது, 12.3-ஆவது பிரிவின்கீழ் வரி விதிப்புக்கு முன்னதாக கலந்தாலோசனையை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்று இந்தியா வலியுறுத்துகிறது.

அமெரிக்கா இந்த வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அல்லது இதில் மேற்கொண்டு ஆலோசனை எதுவும் நடைபெறாவிட்டால் இந்தியாவின் பதிலடி வரி விதிப்பு வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் காஸாவின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்! 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 14) அதிகாலை நடத்திய ... மேலும் பார்க்க

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிந... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக... மேலும் பார்க்க

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் ந... மேலும் பார்க்க

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் க... மேலும் பார்க்க

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்: ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

நமது சிறப்பு நிருபர் எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்த எஸ் 400 சாதனம், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் "ஆப... மேலும் பார்க்க