செய்திகள் :

அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்

post image

இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தங்கள் குறித்து அமெரிக்க ஊடகத்துக்கு மார்க்கோ ரூபியோ அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

” ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு தரப்பினரும் முதலில் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். ஆனால், ரஷியா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்து அதனை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பது மிகவும் கடினமான ஒன்று. இந்தியா - பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது, கம்போடியா - தாய்லாந்து இடையே என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம்.

மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.” என்றார்.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை எந்த வெளிநாட்டு தலைவரும் இந்தியாவிடம் நிறுத்த சொல்லவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, இந்தியாவை கண்காணிப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

US Secretary of State Marco Rubio has said that India and Pakistan are under constant surveillance.

இதையும் படிக்க : உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

கால் லிட்டர்(250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 125?

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், த... மேலும் பார்க்க

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் இணையதளம் முடக்கம்பாகிஸ்தான் பயங்கரவாதி... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறை... மேலும் பார்க்க

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார். பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீ... மேலும் பார்க்க