செய்திகள் :

அமெரிக்க வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைத்த டிரம்ப்: இந்தியாவுக்கு பாதிப்பு

post image

அமெரிக்க தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைக்க அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பது இந்தியா வானிலை ஆய்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய புவிஅறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து, தற்போது அந்நாட்டு தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான (என்ஓஏஏ) நிதியை 27 சதவீதம் குறைக்க டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எம்.ரவிச்சந்திரன் பேசியதாவது: அமெரிக்கா தரப்பில் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்தாலோ, வானிலை ஆய்வு மாதிரிகள் இல்லாமல் போனாலோ எவ்வித பிரச்னையும் எழப்போவதில்லை. இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் நிகழும் மாற்றங்களை கணிப்பதில் என்ஓஏஏ முக்கியப் பங்காற்றுகிறது.

என்ஓஏஏ வழங்கும் தரவுகள், இந்திய வானிலை மையத்துக்கு உதவுகின்றன. பருவமழையை கடலில் நிகழும் மாற்றங்கள் அடிப்படையிலேயே கணிக்க முடியும். கடல்சாா் கண்காணிப்புக்கு முறையான கட்டமைப்புகள் இல்லையெனில் பருவமழையை கணிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். என்ஓஏஏ-க்கு வழங்கப்படும் நிதியை குறைப்பது என்பது நமது நாட்டின் வானிலை ஆய்வு மைய கணிப்புகளில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க