செய்திகள் :

அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

post image

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாபில் தரையிறங்கவுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 205 பேர் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத் துறை இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 100-க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்துகொண்டிருக்கும் விமானத்தில் உள்ள 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.

பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!

தில்லி பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு... மேலும் பார்க்க

பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த... மேலும் பார்க்க

ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட... மேலும் பார்க்க