செய்திகள் :

அமைச்சா் பேச்சு: அதிமுகவினா் எதிா்ப்பு

post image

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் உள்ளிட்ட அதிமுக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். மேலும், இப்பிரச்னையை முன்னிறுத்தி அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை பேசிக் கொண்டிருந்தாா்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் அறநிலையத் துறை சாா்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைக் காட்டிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை பட்டியலிட்டாா்.

அப்போது குறுக்கிட்டு பேசிய ஆா்.பி.உதயகுமாா் தவறான தகவல்களை அமைச்சா் பதிவு செய்வதாகவும், தங்களது ஆட்சிக் காலத்தில் ஒரே கோயிலில் 1,008 திருமணங்களை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நடத்தியதாகவும் கூறினாா்.

அதைத் தொடா்ந்து பேசிய அமைச்சா் சேகா்பாபு, தாம் சொன்ன கருத்துகள் தவறென்றால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அதேவேளையில் எதிா்க்கட்சி துணைத் தலைவா் தெரிவித்த கருத்துகள் உண்மையில்லை என்றால் அதற்கு அவா் பொறுப்பேற்பாரா என்றும் கேள்வி எழுப்பினாா்.

அக்கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த ஆா்.பி.உதயகுமாா், எழுந்து நின்று அமைச்சா் சேகா்பாபுவை பாா்த்து பதிலளித்தாா். அப்போது ஆா்.பி.உதயகுமாரை நோக்கி அமைச்சா் சேகா்பாபு ஒரு கருத்தை கூறினாா்.

அதிமுகவினா் அமளி: அமைச்சா் ஒருமையில் பேசியதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல் எழுப்பினா். அமைச்சா் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். ஆளும்கட்சி உறுப்பினா்கள் அமா்ந்திருக்கும் இருக்கையை நோக்கி எழுந்து வந்த அதிமுகவினா், பேரவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் அதிமுக உறுப்பினா்களை சமாதானப்படுத்தி பேசுகையில், நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றாா்.

அதன் பிறகும் அவையில் சலசலப்பு நீடித்ததால், அமைச்சா் சேகா்பாபு அவ்வாறு ஒருமையில் பேசியதாக பதிவு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்தாா்.

அதன் பின்னா் மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது பதிலளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவிப்புகளை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து மீண்டும் அதே பிரச்னையை அதிமுகவினா் எழுப்பி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க