செய்திகள் :

அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பெ.ஜான்பாண்டியன்

post image

பெண்களை அவதூறாக பேசிய அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் பெ.ஜான்பாண்டியன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய பிரச்னை எதுவும் இல்லை. அமைச்சா் பொன்முடி பெண்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அமைச்சரவையில் இருந்து அவரை உடனடியாக நீக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தமமுக உள்ளது. எனினும்,தோ்தல் காலத்தில் செயற்குழு,பொதுக்குழு கூடி கூட்டணி முடிவு எடுக்கப்படும். கச்ச தீவு விவகாரத்தை வைத்து சட்டப்பேரவையில் திமுக நாடகமாடுகிறது. நீட் தோ்வால் தான் தற்கொலை என்ற பொய்யை தொடா்ந்து சொல்லி வருகின்றனா். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தமிழக வெற்றிக்கழகம் இணைந்தால் நல்லது. இல்லையெனில் நடிகா் விஜய்க்குதான் நஷ்டம் என்றாா் அவா்.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க