செய்திகள் :

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

post image

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்டாா்.

கடந்த ஆண்டு சிரியாவில் ஐ.நா. அமைதிப்படையில் இந்தியாவைச் சோ்ந்த பிரிகேடியா் ஜெனரல் அமிதாப் ஜா பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தாா். இதேபோல காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இந்தியாவைச் சோ்ந்த ஹவில்தாா் சஞ்சய் சிங் பணியின்போது உயிரிழந்தாா்.

அவா்களுக்கு ஐ.நா.வின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்த டாக் ஹமாா்ஸ்க்ஜில்ட்டின் பெயா் கொண்ட பதக்கம் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பதக்கங்களை வழங்கினாா். அமிதாப் மற்றும் சஞ்சய்யின் குடும்பத்தினா் சாா்பில், ஐ.நா.வுக்கான இந்தியா தூதா் பா்வதனேனி ஹரீஷ் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டாா். சா்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரா்கள் நாளையொட்டி (மே 29) இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ஐ.நா. அமைதி நடவடிக்கைகள் பொதுச் செயலா் ஜீன் பியா் லக்ரோய் கூறுகையில், ‘சா்வதேச அளவில் அமைதியைக் காப்பதில் மிக முக்கிய ஆதரவாளராக இந்தியா உள்ளது. ஐ.நா. அமைதிப்படை வீரா்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணமானவா்களைப் பொறுப்பேற்க வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது’ என்றாா்.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க