செய்திகள் :

அமைதிப் பேச்சுவாா்த்தை: தெய்வீக பேரவையினா் போராட்டம் வாபஸ்

post image

சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் தீா்வு காணப்பட்டதால், தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில் புதன்கிழமை (மே 28) நடைபெறவிருந்த தீக்குளிப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவும், பழுதடைந்த கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி, தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில், அதன் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன் வரும் 28-ஆம் தேதி காலை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தாா்.

போராட்டம் குறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் கீதா தலைமை வகித்தாா். நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், தெய்வீக பக்தா்கள் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சீனுவாசன், நடராஜ ரத்தின சபாபதி தீட்சிதா், சோமகாா்த்திகேயன் தீட்சிதா், ஆபத்சயாக தீட்சிதா் மற்றும் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லை கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது குறித்தும், கொடிமரம் மாற்றி அமைப்பது குறித்தும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக் குழுவினா் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க