செய்திகள் :

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு: ரஷியா

post image

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

தற்போதைய நிலையில், உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்வதற்கான தகவல் இணைப்பு வாயில்கள் திறந்துதான் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எங்களது பிரதிநிதிகள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

இருந்தாலும், இப்போதைய நிலையில் நாங்கள் உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தைகளை நிறுத்திவைத்துள்ளோம்.

போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு ரஷியா எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு அந்த பேச்சுவாா்த்தைகளில் முட்டுக்கட்டை போடுகின்றன. இதன் காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தனக்கு நட்புறவு இருந்தாலும் உக்ரைன் போரை அவா் முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பது எரிச்சலை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாா்.

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: புதினிடம் காட்டிவரும் பொறுமையை நான் விரைவில் இழந்துவிடுவேன். ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரி விதிப்பு போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அத்தைய நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கிவிட்டேன். ரஷியாவிடமிருந்து மிக அதிகமாக எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50 சதவீத வரி கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளேன். இது அந்த நாட்டுடன் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்றாா் டிரம்ப்.

பிரேஸில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேஸிலில் தனது பதவியைத் தக்கவைக்க சட்டவிரோத கும்பல்களுடன் சோ்ந்து சதிச் செயலில் ஈடுபட்டதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா... மேலும் பார்க்க

காங்கோ: படகு விபத்தில் 86 போ் உயிரிழப்பு

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 போ் உயிரிழந்தனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், வடமேற்கு ஈக்வடேயுா் மாகாணம், பாசங்கூசு பகு... மேலும் பார்க்க

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சா்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ எ... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளா் படுகொலை: இளைஞா் கைது! யார் இந்த டைலா் ராபின்ஸன்?

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆா்வலரும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சாா்லி கிா்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக டைலா் ராபின்சன் (22) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீா்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டு, இஸ்ரேலையு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டித்து கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபா் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே தலை துண்டித்து புதன்கிழமை கொல்லப்பட்டாா். இதுகுறித்து டல்லாஸ் போலீஸாா் கூறியதாவது: கா்நாடகத்தை பூா்வ... மேலும் பார்க்க